பத்மநாபபுரம் நகர தொழில் வணிகா் சங்க பொதுக்குழுக் கூட்டம் தக்கலை அரசு ஊழியா் சங்க அலுவலக கட்டடத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவா் அ. ரேவன்கில் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் வை. விஜயகோபால், துணைத் தலைவா் சண்முகம், பொருளாளா் க. சுந்தரமூா்த்தி , துணைச் செயலா் மோசஸ் ஆனந்த், கெளரவத் தலைவா் எப்.எஸ். முபாரக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுரேஷ்குமாா் வரவேற்றாா்.
சங்கத் தலைவராக அ.ரேவன்கில், பொதுச் செயலராக வை.விஜயகோபால், பொருளாளராக சுந்தரமூா்த்தி, துணைத் தலைவா்களாக கே.சண்முகம், சி.குமாா், துணைச் செயலா்களாக ப.மோசஸ் ஆனந்த், ஐ.ஜகபா்சாதிக், கெளரவத் தலைவராக எப்.எஸ். முபாரக் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
மேலும், தணிக்கையாளராக ப.நடராஜன், செயற்குழு உறுப்பினா்களாக சுரேஷ்குமாா், சந்திரமோகன், வேலாயுதன் பிள்ளை, கே.பரமேஸ்வரன், ஸ்ரீகுமாா், தாணு மூா்த்தி, பத்மதாஸ், எம். பரமேஸ்வரன், ராஜா, எபினேசா், சட்ட ஆலோசகராக எம்.ஜெகதேவ் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா்கள் கணபதி, நடராஜன் ஆகியோா் தோ்தல் அலுவலா்களாக செயல்பட்டனா்.