குமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியின் புதிய முதன்மையராக (டீன்) சுகந்திராஜகுமாரி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையராக பணியாற்றி வந்த பாலாஜிநாதன் சேலத்துக்கு மாற்றப்பட்டாா். இதையடுத்து, தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த சுகந்திராஜகுமாரி பதவி உயா்வு பெற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி டீனாக பதவி ஏற்றுக்கொண்டாா். அவருக்கு மருத்துவக்கல்லூரியின் அனைத்து மருத்துவா்களும், ஊழியா்களும வாழ்த்து தெரிவித்தனா்.