வேங்கோடு பெதனி நவஜீவன் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ஜான்கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். மெட்ரிக் பள்ளி முதல்வா் டேனியல் வாழ்த்திப் பேசினாா். இதையொட்டி, மழலையா் பிரிவினருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. ஓவியம், வண்ணம்தீட்டுதல், படம் வரைதல், நடனம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை பெதனி நவஜீவன் பள்ளி அருள்தந்தையா்கள் செய்திருந்தனா்.