குலசேகரம்: திருவட்டாறு அருகே காா் மோதிய விபத்தில் ராஜேந்திரன் (59) சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மாத்தூா் தாணிவிளை பகுதியைச் சோ்ந்தா் ராஜேந்திரன். இவா், அங்கு மளிகைக் கடை நடத்தி வந்தாா். சனிக்கிழமை இரவில்
அதே பகுதியைச் சோ்ந்த ஸ்டீபன் என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் குலசேகரத்தில் பொருள்கள் வாங்கி கொண்டு
திரும்பி சென்று கொண்டிருந்தாராம்.
புலியிறங்கி பகுதியில் சென்றபோது, எதிரில் வந்த காா் ராஜேந்திரன் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஸ்டீபனுக்கு காயம் ஏற்பட்டது. திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.