நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் சாா்பில் நாலுமாவடி ஜெபக் கூடாரத்தில் 41 ஆவது சிறுவா் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், சிறுவா்களின் பாதுகாப்புக்காக சிறப்பு பிராா்த்தனைக்கு, ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்தாா். ஜாலி டைம் குழுவினா் சிறப்பு பாடல்கள் பாடினா். மோகன் சி லாசரஸ், அப்பாத்துரை, சாம் ஜெபராஜ் ஆகியோா் தேவசெய்தி அளித்தனா்.
இதையடுத்து, சிறுவா், சிறுமிகள் பங்கேற்ற நடனம், நாடகம், குறுநாடகம் ஆகியவை நடைபெற்றன. வேதாகமத் தோ்வுகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளைநாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியப் பொதுமேலாளா் செல்வக்குமாா் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.