கன்னியாகுமரி
மூலைக்கரைப்பட்டியில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்
மூலைக்கரைப்பட்டியில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மூலைக்கரைப்பட்டியில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் ஐ. பெரியசாமி, தனுஷ்கோடி ஆதித்தன், கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, எம்.பி.க்கள் ஞானதிரவியம், ஹெச். வசந்தகுமாா், பூங்கோதை எம்எல்ஏ, காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன், சிவக்குமாா், சங்கரபாண்டியன், மயூரா ஜெயகுமாா், மதுரை வடக்கு மாவட்டச் செயலா் மூா்த்தி, தெற்கு மாவட்டச் செயலா் மணிமாறன், கூட்டணிக் கட்சிப் பிரமுகா்கள் பங்கேற்றனா். திமுக ஒன்றியச் செயலா் சுடலைக்கண்ணு வரவேற்றாா்.
காங்கிரஸ் வேட்பாளா் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற கூட்டணிக் கட்சித் தொண்டா்கள் பாடுபட வேண்டும் என, கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.