மார்த்தாண்டம் அருகே தாயைக் கத்தியால் குத்திய மகனை போலீஸார் கைது செய்தனர்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம், காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் மனைவி சிசிலெட் (56). முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஜோஸ் (29). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனது தாயிடம் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்வாராம். புதன்கிழமையும் பணம் கேட்டு தகராறு செய்தாராம். தரமறுத்த சிசிலெட்டை ஜோஸ் கத்தியால் குத்தினாராம். இதில், காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, ஜோஸை கைது செய்து, விசாரித்துவருகின்றனர்.