நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக மூதாட்டியை தாக்கியவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
நித்திரவிளை அருகே வாவறை கரும்பனாவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்தாய் (75). இவரது வீட்டின் முன்பகுதி வழியாக அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (35) பாதை அமைக்க முயன்றாராம். இதற்கு செல்லத்தாய் எதிர்ப்பு தெரிவித்திருந்தாராம். இந்நிலையில் செல்லத்தாய் வியாழக்கிழமை வீட்டுமுன் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த செல்வராஜ் அவரை அவதூறாக பேசி தாக்கினாராம். இதுகுறித்து நித்திரவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.