கன்னியாகுமரி அருள்மிகு குகநாதீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவாதிரை நட்சத்திர நாளன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கோமாதா பூஜை, காலை 9 மணிக்கு சங்கு பூஜை, காலை 10.30-க்கு 1008 சங்காபிஷேகம், அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வாகன பவனி நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா, குகநாதீஸ்வரர் பக்தர்கள் பேரவைத் தலைவர் எம்.கோபி உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.