குமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இறச்சகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து, நாவல்காடு, ஈசாந்திமங்கலம், துவரங்காடு, திட்டுவிளை, சிறமடம், ஞாலம், அருமநல்லூர், தடிக்காரன்கோணம், கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அவர் பேசுகையில், மத்திய அரசின் திட்டங்களால் குமரி மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லாமல் குமரி மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. தொடர்ந்து வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிட பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றார் அவர். அவருடன், தமிழக அரசு தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அதிமுக தோவாளை ஒன்றியச் செயலர் கிருஷ்ணகுமார், மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் சென்றனர்.