பேச்சிப்பாறை அணை  பகுதியில் பலத்த மழை

குமரி மாவட்டத்தின் அணைப் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.

குமரி மாவட்டத்தின் அணைப் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயிலும், வெப்பமும் நிலவி வருகிறது. வெயில் காரணமாக பயிர்கள் கருகுவதோடு, குடிநீர் ஆதாரங்களும் வறண்டு வருகின்றன. 
விவசாயிகளும், மக்களும் மழையை எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாள்களாக மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கார்மேகம் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. 
இதில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் திற்பரப்பு, குலசேகரம், அருமனை, திருவட்டாறு, வேர்க்கிளம்பி, தக்கலை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com