பெண்ணிடம் 7.5 பவுன் சங்கிலி பறிப்பு

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே பெண்ணைத் தாக்கி 7.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை  போலீஸார் தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே பெண்ணைத் தாக்கி 7.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை  போலீஸார் தேடி வருகின்றனர்.
வெள்ளிச்சந்தை அருகே மேல சங்கரன்குழியைச்  சேர்ந்தவர் ஷைலஜா (52). இவர், சனிக்கிழமை இரவு, கடைக்கு பொருள்கள் வாங்கச் சென்று விட்டு அப்பகுதி சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், ஷைலஜாவை மறித்து அவர் கழுத்தில் கிடந்த 7.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். அப்போது ஷைலஜா மர்ம நபர்களுடன் போராடியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளிச்சந்தை போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com