களியக்காவிளை அருகேயுள்ள பாத்திமநகர் குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (ஆக. 16) பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெறுகிறது.
இதையொட்டி, கோயிலில் காலை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், தேவி பாகவத பாராயணம், மதியம் அன்னதானம் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
மாலை 6.30 மணிக்கு முத்துக்குடை அணிவகுப்புடன் அம்மன் சுயம்பு எழுந்தருளலும், பொங்கலிடும் வழிபாடும் நடைபெறும்.