தக்கலை அருகே அதிகளவு தூக்க மாத்திரை தின்றவர் மரணம்

தக்கலை அருகே  உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டதில் திங்கள்கிழமை இறந்தார்.  

தக்கலை அருகே  உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டதில் திங்கள்கிழமை இறந்தார்.  
 தக்கலை அருகேயுள்ள ராமன்பறம்பு  பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், வசுமதி தம்பதியினருக்கு கிரீஷ் (38),  சதீஷ் என இரு மகன்கள் உண்டு.  கிரீஷ் இளம் வயதிலேயே நோயினால் பாதிக்கப்பட்டு  மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.  இதனால் அவர் மிகுந் த  மன வேதனையுடன்  இருந்து வந்தாராம். மேலும் தினசரி இரவு தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்குவது வழக்கமாம்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தாராம். குடும்பத்தினர் அவரை மீட்டு தக்கலை  அரசு மருத்துவமனையில் முதலுதவிஅளித்து, மேல் சிகிச்சைக்காக  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவர் திங்கள்கிழமை இறந்தார். 
இதுகுறித்து அவரது சகோதரர் சதீஷ் அளித்த புகாரின்பேரில்  தக்கலை காவல் ஆய்வாளர் அருள்பிரகாஷ் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com