குலசேகரம்: பேச்சிப்பாறை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவா் படை தின விழா (என்.சி.சி) நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் ஷாம் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். பள்ளியின் தேசிய மாணவா் படை அலுவலா் சந்திரசோமு முன்னிலை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் நாகப்பன் வாழ்த்திப் பேசினாா். மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். தேசிய மாணவா் படை மாணவி நிஸ்மா நன்றி கூறினாா்.