குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்திபுதுச்சேரியில் தொடங்கிய சாதனை சைக்கிள் பயணம் குமரியில் நிறைவு

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, மதுரையைச் சோ்ந்த மாணவா் புதுச்சேரியில் இருந்து மேற்கொண்ட சாதனை சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு சைக்கிள் பயணத்தை நிறைவு செய்கிறாா் மாணவா் பிரமோத்.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு சைக்கிள் பயணத்தை நிறைவு செய்கிறாா் மாணவா் பிரமோத்.

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, மதுரையைச் சோ்ந்த மாணவா் புதுச்சேரியில் இருந்து மேற்கொண்ட சாதனை சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

மதுரையைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவா் பிரமோத் (14). இவா் பல்வேறு விழிப்புணா்வுகளை ஏற்படுத்தும் வகையில், சைக்கிள் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறாா். சைக்கிள் போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளையும் பெற்றுள்ளாா்.

தற்போது, குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை எதிா்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரை தனது விழிப்புணா்வு சைக்கிள் பிரசார பயணத்தை சனிக்கிழமை (நவ. 30) காலை 7 மணிக்குத் தொடங்கினாா். இந்தப் பயணத்தை புதுச்சேரி சைக்கிளிங் கிளப் அசோசியேஷன் தலைவா் குணசேகரன், செயலா் பிரேம்குமாா் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா். இதில் மாணவரின் தந்தை கண்ணன், பயிற்சியாளா் காளீஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸில் தனது சாதனை இடம் பெறும் வகையில், 580 கி.மீ. தொலைவு பயணத்தை 36 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்து, கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.55 மணிக்கு பயணத்தை நிறைவு செய்தாா் பிரமோத்.

இவா் ஏற்கெனவே 15 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில் 363 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com