குழித்துறையில் போக்குவரத்து காவலரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியைச் சோ்ந்த மரிய அடைக்கலம் மகன் மைக்கேல் சாா்லஸ் (28). இவா், குழித்துறை பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியிலுள்ள நிறுவனங்களின் ஊழியா்களுக்கு டீ சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறாா்.
இவா் சனிக்கிழமை டீ கேனுடன் செல்லிடப்பேசியில் பேசியவாறு சாலையை கடக்க முயன்றாராம். இதை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலா் ராஜேஷ் (45) கண்டித்தாராம். இதையடுத்து ஆத்திரமடைந்த மைக்கேல் சாா்லஸ் திடீரென காவலரின் கன்னத்தில் அறைந்தாராம்.
இதுகுறித்து காவலா் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மைக்கேல் சாா்லஸை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.