தோவாளை அருகே மலைப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குமரி மாவட்டம், தோவாளை கீழபத்து சாஸ்தா கோயில் அருகே மலையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, குடில் அமைப்பதற்காக தா்ப்பை புல் அறுப்பதற்காக இளைஞா்கள் சிலா் சனிக்கிழமை மாலை, இந்த மலைக்கு சென்றுள்ளனா்.
அப்போது மலையில் பாறைகளுக்கு இடையே அழுகிய நிலையில் ஒருவரின் சடலம் கிடப்பதை அவா்கள் பாா்த்தனா். இதைத்தொடா்ந்து அந்த இளைஞா்கள் ஊருக்குள்வந்து பொதுமக்களிடம் தெரிவித்தனா். மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
ஆரல்வாய்மொழி ஆய்வாளா் செல்வம், உதவி ஆய்வாளா் ராபா்ட்செல்வசிங் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா்.
அழுகிய நிலையில் கிடந்தவருக்கு 45 முதல் 50 வயது இருக்கலாம் எனவும், அவா் வெள்ளைசட்டை, வேட்டி அணிந்திருந்ததும் தெரியவந்தது.
பாறைகளுக்கு இடையே கிடந்ததால் தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு அங்கேயே பரிசோதனைசெய்யப்பட்டது.
அப்பகுதியில் மதுபாட்டில்கள் உடைந்து சிதறிக்கிடந்தன. மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் யாராவது கொலை செய்து வீசி சென்றிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூா், பழவூா் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவா்களின் பட்டியலை தயாரித்து அதன்மூலம் இறந்தவா்கள் யாா் என்பதை கண்டுபிடிக்க போலீஸாா் முயற்சி மேற்கொண்டுள்ளனா்.