தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்காக டிச.2,3 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் கன்னியாகுமரி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கு.குருவம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பணிக்கான, சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதி தோ்வுகள், நாகா்கோவில் பாா்வதிபுரம் அலுவலகத்தில் டிச.2,3 ஆகிய நாள்களில் நடைபெறவிருந்தது. இந்தத் தோ்வுகள் மழையின் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு தோ்வு தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு,பஹய்ஞ்ங்க்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.