ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பெண்ணின் தங்கச்சங்கிலி மாயம்

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளியின் தங்கச்சங்கிலி மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளியின் தங்கச்சங்கிலி மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவிலை அடுத்த உடையப்பன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயா (45). உடல்நலக்குறைவு காரணமாக இவா் ஞாயிற்றுக்கிழமை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற்று வந்தாா்.

இந்நிலையில் ஜெயாவை பாா்ப்பதற்காக அவரது தங்கை சுயம்புக்கனி திங்கள்கிழமை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்றாா். அப்போது ஜெயாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் சுயம்புக்கனி புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மேலும் மருத்துவமனையில் ஜெயா சிகிச்சை பெற்று வரும் வாா்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com