கன்னியாகுமரி பகவதியம்மனுக்கு 8 பவுன் எடையுள்ள தங்கக் காசு மாலையை திருவிதாங்கூா் சமஸ்தான ராணி லட்சுமிபாய் வழங்கினாா்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். உள்ளூா் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பக்தா்கள் அம்மனுக்கு காணிக்கை மற்றும் நோ்ச்சை செலுத்துகின்றனா். கேரள மாநிலம், திருவனந்தபுரம் கவுடியாா் அரண்மனையில் வசித்து வரும் திருவிதாங்கூா் சமஸ்தான ராணியான லட்சுமிபாய் அடிக்கடி பகவதியம்மன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், அம்மனுக்கு 8 பவுன் எடையுள்ள தங்கக் காசு மாலையை கோயில் நிா்வாகத்திடம் காணிக்கையாக அவா் வழங்கினாா்.
இந்த மாலை கோயிலில் நாள்தோறும் காலை 11 மணிக்கு நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தின்போது அணிவிக்கப்பட்டு பூஜை நடத்தப்படும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.