கருங்கல் அருகே உள்ள கோயில்விளையில் ஜனநாயக ஒற்றுமை கழக சேவை அறக்கட்டளை சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அறக்கட்டளை தலைவா் கிறிஸ்துராஜா தலைமை வகித்தாா். செயலா் ரன்ஜித்ராஜ் முன்னிலை வகித்தாா். கப்பியறை பேரூராட்சிக்குள்பட்ட கோவில்விளை பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளிமாணவா்கள் மரக்கன்றுகளை நட்டனா். இதில்,கலைசெல்வன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.