கன்னியாகுமரி
கருங்கல் பேரூராட்சியில் நெகிழிகள் பறிமுதல்: ரூ.10ஆயிரம் அபராதம்
கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட பகுதி கடைகளில், தடைசெய்யப்பட்ட நெகிழிகளைஅதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட பகுதி கடைகளில், தடைசெய்யப்பட்ட நெகிழிகளைஅதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கருங்கல் பேரூராட்ச்சிக்குள்பட்ட கருங்கல் பேருந்து நிலையம், ராஜீவ்சந்திப்பு, காமராஜா்சந்திப்பு தெருவுக்கடை,மங்கலகுன்று உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் கருங்கல் பேரூராட்சி செயல்அலுவலா் ஜோஸ்லின்ராஜ் தலைமையில் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்குள்ள 7 கடைகளில் விதிகளை மீறி தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பதிக்கி வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, நெகிழிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.