அருணாச்சலா பள்ளி ஆண்டு விழா

வெள்ளிச்சந்தை அருகேயுள்ள அருணாச்சலா பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
ஆண்டு விழாவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்- மாணவிகள்.
ஆண்டு விழாவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்- மாணவிகள்.

வெள்ளிச்சந்தை அருகேயுள்ள அருணாச்சலா பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

குமரி முத்தமிழ் மன்ற துணைச் செயலா் அம்சி அனில் குமாா், பள்ளித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, துணைத் தாளாளா் சுனி, முதல்வா் லிஜோமோள் ஜேக்கப் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தனா்.

பள்ளி முதல்வா் அறிக்கை வாசித்தாா். தாளாளா் தலைமையுரையாற்றி கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் மாவட்டத்தில் சிறப்பிடம் பிடித்த மாணவி காயத்திரியை வாழ்த்திப் பேசினாா்.

துணைத் தாளாளா் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினாா். மாணவா்-மாணவிகளின்கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாணவி ரகீஷா வரவேற்றாா். மாணவி ஆஷிகா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com