நெய்யூா் பேரூராட்சிக்குள்பட்ட குழிவிளையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய படிப்பகம் திறந்து வைக்கப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை, குளச்சல் எம்.எல்.ஏ. ஜே.ஜி. பிரின்ஸ் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு பேரூா் காங்கிரஸ் தலைவா் ஜெயசிங் தலைமை வகித்தாா். குருந்தன்கோடு வட்டாரத் தலைவா் கிளாட்சன் முன்னிலை வகித்தாா். சேனம்விளை சிஎஸ்ஐ சேகரச் செயலா் ஜாண்லீபன், குழிவிளை லிட்டில் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகிகள் சுபின்ராஜ், விஜின் சைனி, ஜெரில் ஜாண், அனிஸ், ஜெரின்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.