நாகர்கோவிலில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகர்கோவில் கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், பிப்.15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் குமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவர்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ, ஆசிரியர்கள் மற்றும் கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.