கருங்கல் அருகேயுள்ள வெள்ளியாவிளை பகுதியில் பைக் மீது ஜீப் மோதியில் கல்லூரி மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியைச் சேர்ந்த பாலுப்பிள்ளை மகன் சாஜின் (20). மண்டைக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், வியாழக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் குளச்சலில் இருந்து தன் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். வெள்ளியாவிளை பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஜீப் சஜின் மீது மோதியதாம். இதில், தூக்கிவீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.