மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாகர்கோவிலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் அலெக்ஸ் வரவேற்றார். கூட்டத்தில் எம்எல்ஏக்கள் வசந்தகுமார், பிரின்ஸ், ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி.ராமசுப்பு , குமரி மகாதேவன் ஆகியோர் பேசினர். இதில் வட்டாரத் தலைவர்கள் காலபெருமாள், ராஜஜெகன், முருகானந்தம், அசோக்ராஜ், வைகுண்டதாஸ், திருத்துவதாஸ், மாவட்ட நிர்வாகிகள் சுயம்பு, பாபுஆண்டனி, மகேஷ்லாசர், சிவகுமார், தாரகைகத்பட், மாநில பொது செயலர் ஜெசோமேரி, அகில இந்திய கமிட்டி உறுப்பினர்கள் சாந்திரோஸ்லின், கிறிஸ்டிரமணி, வர்த்தக காங்கிரஸ் மாநிலத் துணைத்தலைவர் ஏ,.எம்.டி.செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.