மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 60 லட்சத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகளை விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து அவரது நாகர்கோவில் முகாம் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை; அதிமுக மாநிலங்களவை குழு செயலர் விஜயகுமார் எம்.பி. சனிக்கிழமை முதல் 3 நாள்கள் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
சனிக்கிழமை (ஜன.12) காலை 10 மணிக்கு அகஸ்தீசுவரம் பேரூராட்சி சந்தையடியில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட திறந்தவெளி சமுதாய நலக்கூடத்தினை திறந்து வைக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜன.13) காலை 9 மணிக்கு கணபதிபுரம் பேரூராட்சியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கபடி உள்விளையாட்டு அரங்கத்தினை அவர் திறந்து வைக்கிறார். ஜன.14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு, தென்தாமரைகுளம் பேரூராட்சி, முகிலன்குடியிருப்பில் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை திறந்து வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.