ரூ.60 லட்சத்தில் திட்டப் பணிகள் இன்று தொடக்கம்

மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 60 லட்சத்தில்  வளர்ச்சித்  திட்டப்பணிகளை விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைக்கிறார்.

மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 60 லட்சத்தில்  வளர்ச்சித்  திட்டப்பணிகளை விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து அவரது நாகர்கோவில் முகாம் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை;  அதிமுக மாநிலங்களவை குழு செயலர் விஜயகுமார் எம்.பி. சனிக்கிழமை முதல் 3 நாள்கள் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். 
சனிக்கிழமை (ஜன.12)  காலை 10 மணிக்கு அகஸ்தீசுவரம் பேரூராட்சி சந்தையடியில்   ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட திறந்தவெளி சமுதாய நலக்கூடத்தினை திறந்து வைக்கிறார். 
ஞாயிற்றுக்கிழமை (ஜன.13) காலை 9 மணிக்கு கணபதிபுரம் பேரூராட்சியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கபடி உள்விளையாட்டு அரங்கத்தினை அவர் திறந்து  வைக்கிறார். ஜன.14  ஆம் தேதி மாலை 6 மணிக்கு, தென்தாமரைகுளம் பேரூராட்சி, முகிலன்குடியிருப்பில்  ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை திறந்து வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com