மார்த்தாண்டம் அருகே கோதேஸ்வரம் கோயிலில் தர்ம ரக்ஷண சமிதி சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 13) ஐயப்ப சங்கம விழா நடைபெறுகிறது.
விழாவுக்கு, அமைப்பின் ஒன்றியத் தலைவர் சுதர்ஸனராஜ் தலைமை வகிக்கிறார். மண்டல அமைப்பாளர் டி. தாமோதரன், மாவட்டத் தலைவர் சி. ராஜ்குமார், பொதுச்செயலர் பாலசேகர், செயலர் பி. ராஜ் மோகன், அமைப்பாளர் ஆர். சதாசிவன் ஆகியோர் முன்னிலை வகிக்கினர்னர். தொடர்ந்து ஆசிரியர் இரா. ரமேஷ் தலைமையில் ஐயப்ப சத்சங்கம், ஐயப்ப பூஜை, அஷ்டோத்திர அர்ச்சனை, பிரார்த்தனை ஆகியன நடைபெறுகிறது. குமாரகோவில் சுவாமி பிரணவானந்த மஹராஜ் அருள் ஆசி வழங்குகிறார்.