இனயம் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஐஎன்டியூசி சார்பில் அடையாள அட்டை மற்றும் ஸ்டிக்கர்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் கில்பர்ட் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் பொதுச் செயலர் எடிசன், மாவட்ட மீனவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜன், ஐஎன்டியூசி மாவட்ட துணைத் தலைவர் ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் அனந்த கிருஷ்ணன், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டை வழங்கிப் பேசினார். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான் ஸ்டிக்கர்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் கென்னடி, மாவட்டச் செயலர் மிக்கேல், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் அலெக்ஸாண்டர், கிளைடாஸ், ராபின்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.