கருங்கல்லில் சமக மகளிரணி சார்பில் பொங்கல் விழா மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணிச் செயலர் சோபிதராணி தலைமை வகித்தார். கிள்ளியூர் ஒன்றியச் செயலர் ஆன்றனி முன்னிலை வகித்தார். குமரி மேற்கு மாவட்டச் செயலர் கோல்டுவின் ஏழை, எளியோருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கி பேசினார்.
இதில், மாவட்ட அவைத் தலைவர் சோபன், இளைஞரணிச் செயலர் விஷ்ணுகுமார், சாஜூகுமார், ராஜேந்திரன், கிரிஷ்மா, பேபி, தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.