கன்னியாகுமரி புனித பவுல் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மைக்கேல் வேதசிரோமணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவபிரகாசம், புனித பவுல் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் முதல்வர் ஜி.ஆல்பி, முன்னாள் மாணவி பிரபினா உள்பட பலர் வாழ்த்திப் பேசினர். மாணவர், மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அகாதெமியின் பொருளாளர் ராஜேந்திரபாபு நன்றி கூறினார்.