கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் திருவட்டாறு ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
திற்பரப்பு அருவிப் பகுதியில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர், திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை பேரூராட்சிப் பகுதி, பேச்சிப்பாறை, அயக்கோடு உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, கிள்ளியூர் பேரவை உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார், திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், கட்சியின் நிர்வாகிகள் ரெத்தினகுமார், ராஜரெத்தினம், மோகன்தாஸ், விமல் ஷெர்லின் சிங், சுரேஷ்,வேலப்பன், வில்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலர் விஸ்வம்பரன் உள்பட பலர் உடனிருந்தனர்.