களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியில் யுபிஎஸ்சி, டி.என்.பி.எஸ்.சி.,வங்கிப் பணி மற்றும் தையல் பணி உள்ளிட்ட தொழில்சார் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, கல்லூரிச் செயலர் அருள்தந்தை எம். எக்கர்மென்ஸ் மைக்கேல் தலைமை வகித்தார். பயிலரங்கில் அருள்தந்தை எஸ்.கே. ஜோஸ் ராபின்சன், மாணவர்களுக்கு தொழிற்பயிற்சியின் அவசியம் குறித்துப் பேசினார். கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரராஜன், அருள்சகோதரி மேரி மெற்றில்டா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேராசிரியர்கள், மாணவர், மாணவர்கள் கலந்துகொண்டனர். வணிகவியல் துறை பேராசிரியர் எம். சிந்து வரவேற்றார். பேராசிரியர் கே. லூக்காஸ் நன்றி கூறினார்.