சாம்பவர்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அனுமன்நதியின் வடகரையில் குகையில் அமைந்துள்ள சிவலிங்கம், சாம்பவ முனிவர், அனுமன், வராக மூர்த்தி ஆகியோருக்கும், தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரர், நந்தீஸ்வரர் ஆகியோருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.