அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு, திற்பரப்பு அருவியருகே கோதையாற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் முடிவைக் கண்டித்து, அனைத்துக் கட்சி போராட்டக்குழு சார்பில், திற்பரப்பில் செவ்வாய்க்கிழமை தர்னா நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு, மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். பாஜக நிர்வாகிகள் சுஜித்குமார், மனோகரன், புஷ்பரதி மனோகரன், கடையல் மனோகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் எம். அண்ணாதுரை, எஸ். ஆர். சேகர், எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், கிருஷ்ணவேணி, சதீஸ், ஜூடஸ் குமார், பி. நடராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள் காஸ்டன் கிளிட்டஸ், ராஜரத்தினம், சுரேஷ், திமுகவின் உள்பட அரசியல் கட்சியினர், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.