குமாரகோவில் என்.ஐ. கலை அறிவியல் கல்லூரியில், காட்சி தொடர்பியல் துறை சார்பில் "எக்கோ ஃபெஸ்ட்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் எஸ்.பெருமாள் தலைமை வகித்தார். காட்சி தொடர்பியல் துறை தலைவர் சைனி வரவேற்றார். கல்லூரித் தாளாளர் ஏ.பி.மஜீத்கான், பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு இயக்குநர் கே.ஏ. ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
திரைப்பட இயக்குநர் எழில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இதில், மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர். அவர்களிடையே கலைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துறைத் தலைவர் சிபி.எஸ்.குமார் நன்றி கூறினார்.