குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

தெங்கம்புதூர் அருகே முதியவார் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

தெங்கம்புதூர் அருகே முதியவார் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
தெங்கம்புதூர் அருகேயுள்ள தெற்கு புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (70).  இவர் கடந்த புதன்கிழமை உத்தண்டன் குடியிருப்பு அருகே பால்குளம் பகுதியில் உள்ள குளத்துக்கு குளிக்கச் சென்றாராம். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லையாம்.    இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.  இந்நிலையில் வியாழக்கிழமை மாலை குளத்தில் மகாலிங்கத்தின் சடலம் மிதந்ததாம்.    இதுகுறித்து, தகவலறிந்த  சுசீந்திரம் காவல் துறையினர் மகாலிங்கம் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.  இது குறித்து போலீஸார் வழக்குப்  பதிந்து  விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com