தக்கலை ஷெய்கு பீர்முகம்மது ஒலியுல்லா ஆண்டு பெருவிழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 22) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தக்கலை மெஞ்ஞானி ஷெய்கு பீர்முகம்மது ஒலியுல்லா ஆண்டு பெருவிழா இம்மாதம் 22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங் களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் மே மாதம் 11 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக இருக்கும். மேலும், மார்ச் 22 ஆம் தேதி இம்மாவட்டத்தில் தலைமைக் கருவூலம், கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.