கிள்ளியூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பைக் பேரணி நடைபெற்றது.
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணி, கொல்லஞ்சி, நல்லூர் வழியாக மார்த்தாண்டம் சென்றடைந்தது. இப்பேரணியில் வளர் இளம்பெண்களுக்கான ரத்தசோகை, பெண் பாதுகாப்பு, தன்சுத்தம், பெண்கல்வி, தாய் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின் அவசியம் ஆகியன குறித்து வலியுறுத்தப்பட்டது. இதில், அங்கன்வாடி மைய பணியாளர்கள், உதவியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.