மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 12 சிவாலயங்களில் 2 ஆவது சிவாலயமான இக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.