காசநோய் விழிப்புணர்வு பேரணி மிடாலக்காடு, கடமாங்குழி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
உலக காசநோய் தினத்தையொட்டி நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு குளச்சல் அரசு மருத்துவமனை மருத்துவர் சுஜய் தலைமை வகித்தார். கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெமி, தலைமையாசிரியர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஐயப்பன், சிகிச்சை மேற்பார்வையாளர் கிறிஸ்டல் ராஜ், சுகாதார பார்வையாளர்கள் ஏ. ஆன்ஸி றீஜா, எஸ். ஷ்ரீ கலா, ஆர். சினேகப்பூ ராஜினி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி சுற்றுப் பகுதியில் இப் பேரணி நடைபெற்றது.