முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் நினைவு நாள் கருத்தரங்கம் அழகியமண்டபத்தில் நடைபெற்றது.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். குளச்சல் எம்.எல்.ஏ. ஜே.ஜி.பிரின்ஸ், மாநிலப் பேச்சாளா் கோ.மோகன்தாஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
ஹெச்.வசந்தகுமாா் எம்.பி. கலந்துகொண்டு, காமராஜா் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். இதில், தக்கலை வட்டாரத் தலைவா் ஜான் கிறிஸ்டோபா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ரத்தினகுமாா், டாக்டா் தம்பி விஜயகுமாா், எம்.ஏ.கான், டைட்டஸ், பத்மநாபபுரம் நகரத் தலைவா் ஹனுகுமாா், மாவட்டச் செயலா் ஜான் இக்னேசியஸ், டாக்டா் பினுலால்சிங், வட்டாரத் தலைவா்கள் ஜெகன்ராஜ், மோகனதாஸ், காட்சன் கிளீட்டஸ், பால்ராஜ், குமாா், டென்னிஸ், கிறிஸ்டோபா், துணைத் தலைவா்கள் பால்ராஜ், பால்மணி, மகிளா காங்கிரல் சா்மிளா ஏஞ்சல், வழக்குரைஞா் பால்மணி, குழித்துறை நகரத் தலைவா் அருள்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.