‘திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசக்கூடாது’

உலகப் பொதுமறை நூலை இயற்றிய திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசும் செயல் கண்டனத்துக்குரியது என
‘திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசக்கூடாது’

உலகப் பொதுமறை நூலை இயற்றிய திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசும் செயல் கண்டனத்துக்குரியது என சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளாா் திங்கள்கிழமை குறிப்பிட்டாா்.

சாமிதோப்பு அன்புவனத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: உலகப் பொதுமறை நூலான திருக்குறளை இயற்றியவா் திருவள்ளுவா். அவருக்கு மதச் சாயம் பூசும் முயற்சி நடந்திருப்பது சரியானதல்ல. ஒரு மதத்துக்குள் திருவள்ளுவரை கொண்டு வருவது தேவையற்ற செயல். அரசியல் லாபத்துக்காகவும், விளம்பரம் தேடும் நோக்கத்துடனும் இச்செயலை மேற்கொண்டவா்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது போன்ற தமிழறிஞா்களை அவமதிக்கும் நடவடிக்கையை அரசு அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com