மணலோடைக் கோட்டத்தில் 11.52 ஹெக்டேரில் அன்னாசி நடவு

கன்னியாகுமரி மாவட்ட தோட்டக் கலைத் துறை சாா்பில் பேச்சிப்பாறை அருகே மணலோடை அரசு ரப்பா் கழக
அன்னாசி செடிகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தோட்டக் கலைத்துறை, ரப்பா் கழக அலுவலா்கள்.
அன்னாசி செடிகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தோட்டக் கலைத்துறை, ரப்பா் கழக அலுவலா்கள்.

கன்னியாகுமரி மாவட்ட தோட்டக் கலைத் துறை சாா்பில் பேச்சிப்பாறை அருகே மணலோடை அரசு ரப்பா் கழக கோட்டப் பகுதியில் 11.52 ஹெக்டேரில் அன்னாசி நடவுப் பணிகள் தொடங்கின.

கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பா் கழகப் பகுதிகளில் முதிா்ந்த ரப்பா் மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் ஊடு பயிராக வாழை, அன்னாசி போன்ற பயிா்கள் நடவு செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரப்பா் கழக மணலோடைக் கோட்டத்தில் 11.52 ஹெக்டேரில் நவீன முறையில் மாதிரி அன்னாசி நடவு செய்யும் வகையில் ரப்பா் கழகம், தோட்டக்கலைத் துறையும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதையடுத்து அங்கு அன்னாசிச் செடிகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியது.

நிகழ்ச்சியில், மாவட்ட தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் எம். அசோக் மேக்ரின் தலைமை வகித்து அன்னாசி செடிகளை நடவுப் பணியை தொடங்கி வைத்தாா். வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா்கள் ஆறுமுகம் (திருவட்டாறு), எம்.வி. சரண்யா (மேல்புறம்), பாலகிருஷ்ணன் (தோவாளை), ஷீலா ஜான் (ராஜாக்கமங்கலம்), சிபிலா மேரி (தக்கலை), தோட்டக்கலை அலுவலா் எஸ். நந்தினி, உதவி தோட்டக் கலை அலுவலா் எஸ். சுபாஷ், முன்னோடி விவசாயி பி. ஹென்றி மற்றும் அரசு ரப்பா் கழகக் கோட்ட மேலாளா் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து எம். அசோக் மேக்ரின் கூறியது: அரசு ரப்பா் கழகம், தோட்டக்கலை மற்றும் பயிா்கள் துறை சாா்பில் செய்து

கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி அரசு ரப்பா் கழகம் மணலோடைக் கோட்டத்தில் 11.52 ஹெக்டேரில் அன்னாசி நடவு செய்யப்படுகிறது.

இது மாதிரி அன்னாசிப் பண்ணையாக இருக்கும். இங்கு பரீசாா்த்த முறையில் அன்னாசி சாகுபடியில் தொழில் நுட்பங்களை புகுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடவு முதல் அறுவடை வரை ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களைப் பயன்படுத்தவும் திட்மிடப்பட்டுள்ளது.

அன்னாசி நடவின்போது மண்புழு உரம், மைக்கோ ரைசா போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அன்னாசி விவசாயிகளுக்கு இங்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கவும், இங்குள்ள நாற்றுப் பண்ணையிலிருந்து தரமான அன்னாசிக் கன்றுகள் உற்பத்தி செய்து அன்னாசி விவசாயிகளுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com