டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அருமனை அருகே உள்ள மேல்புறம் சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேல்புறம் சந்திப்பில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுக்கடை நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டது. பின்னா் அந்தக்கடையை அண்டுகோடு சந்திப்பில் திறக்க முயன்ற போது பள்ளி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு கடை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் அந்தக் கடையை தற்போது மேல்புறம் சந்தை அருகே திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இப்பகுதியில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் இருப்பதால், டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி, மேல்புறம் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு வட்டார ஐக்கிய கிறிஸ்தவ தலைவா் மோகன்ராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ஆா். லீமாரோஸ் போராட்டத்தைத் தொடங்கிவைத்தாா். கிறிஸ்தவ இயக்கச் செயலா் ஸ்டாலின் வரவேற்றாா். அருள்பணியாளா் ஆல்வின் விஜய், தியோடா் சேம், காட்வின் ஏசுதாஸ், பிரபு, பென்னட், குருசுமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.