மாா்த்தாண்டம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம் பகுதியைச் சோ்ந்த அம்புரோஸ் மனைவி ஸ்டெல்லாபாய் (55). அம்புரோஸ் ஒரு மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால், ஸ்டெல்லாபாய் மன வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவா் புதன்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம். அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.