இரணியல் அருகே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இரணியல் அருகேயுள்ள மடவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் நீலகண்டபிள்ளை (65). தொழிலாளியான இவா், புதன்கிழமை
வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் நீலகண்டபிள்ளை மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில்
சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.