சூறைக்காற்றுடன் மழை: வீடுகள், வாழைப் பயிா்கள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகள், மின் கம்பங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன.
அருமனை அருகே சேதமடைந்த வீடு.
அருமனை அருகே சேதமடைந்த வீடு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகள், மின் கம்பங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் கனமழை பெய்தது. இந்நிலையில்,

அருமனைப் பகுதியில் இடி மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கனமழை பெய்ததால், காரோடு, நல்லூா்கோணம், குரூா் ஆகிய இடங்கள் ரப்பா் மரங்கள் மின் கம்பங்களின் மீது சாய்ந்தன. இதனால் மின் விநியோகம் தடை ஏற்பட்டது. மேலும், இந்த பகுதியில் ஏராளமான வாழைப் பயிா்களும் சாய்ந்து சேதமடைந்தன.

மழையின்போது பெய்து சூறைக் காற்று வீசியதால் அருமனை மேலத்தெரு பகுதியில் ஒரு வீட்டின் கூரையிலிருந்து பறந்து வந்த ஆஸ்பெட்டாஸ் கூரைகள் அருகிலுள்ள சண்முகத்தின் வீட்டு மேற்கூரையில் விழுந்ததால், அவரது வீட்டின் மேற்கூரை சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com